ஓணம் பண்டிகை நிறைவு பெற்றுள்ள நிலையில், கேரளா சென்றவர்கள் திரும்ப, கூடுதலாக ஒரு சிறப்பு ரயில் இயக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஓணம் பண்டிகை நிறைவு பெற்றுள்ள நிலையில், கேரளா சென்றவர்கள் தமிழகம் திரும்ப வசதியாக கூடுதலாக ஒரு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை செப்டம்பர் 11 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மங்களூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 1.45 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
இந்த ரயில் காசர்கோடு, பையனூர், கண்ணூர், கோழிக்கோடு, பாலக்காடு ரயில் நிலையங்களில் செப்டம்பர் 12 ஆம் தேதி காலை 4.55 மணிக்கு கோவைக்கும் அடுத்து காலை 5.28 மணிக்கு திருப்பூருக்கும் திரும்ப வரும்.
மேலும், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக தாம்பரம் சென்றடையும் என்று சேலம் கோட்டை அதிகாரிகள் தெரிவித்தனர்.