Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இரு தடுப்பூசிகள் போட்டும் சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

    இரு தடுப்பூசிகள் போட்டும் சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

    உலகமெங்கும் அனைத்து மக்களையும் அச்சுறுத்திய கொரோனா வைரஸ் பரவல், தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இந்த வைரஸைக் கண்டு அஞ்சாதவர் எவருமில்லை. அடிக்கடி உருமாறி, அடுத்தடுத்த அலைகளை உண்டாக்கி மக்களை ஒருவித பயத்திலேயே வைத்திருந்தது இந்த கொரோனா வைரஸ்.

    இந்நிலையில், குறையத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த சில நாட்களாக இந்தியாவில் தினசரி பாதிப்பு 2000 நபர்களைத் தாண்டியது. இதனைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பின் அடுத்த அலை ஆரம்பம் தான் போலும் என அனைவராலும் பரவலாக பேசப்பட்டு வந்தது.

    இப்படியான சூழலில், இந்தியாவின் முன்னணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால், இவருடன் நெருங்கியத் தொடர்பில் இருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, மருத்துவர்களின் ஆலோசனைப்படி தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

    லக்னோவுக்கு சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி பயணம் மேற்கொண்டுள்ளார். அன்னைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அறிந்து கொண்டு, தனது லக்னோ பயணத்தை ரத்து செய்து விட்டார். பிறகு, டெல்லிக்கு திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சோனியா காந்தி தற்போது தனிமையில் உள்ளதால், விரைவில் குணமடைவார் என்றும், குணமடைந்த பின்னர் கட்சிப்பணி ஆற்றுவார் என்றும் கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ் பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில், இந்திய அளவிலான தேசிய கட்சி தலைவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது, டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சோனியா காந்தி விரைவாக குணமடைய வேண்டும் என்பது தான் அனைவருடைய எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

    ‘உத்திரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல்’ – சீமான் காட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....