தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து காயம் காரணமாக பிரபல வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகிய நிலையில், பிசிசிஐ சிராஜைத் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களுள் ஒருவர், பும்ரா. இவருக்கு வயது 28. சமீபகாலமாகக் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் பல ஆட்டங்களில் பும்ரா விளையாடவில்லை .
இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் இடம்பெற்றிருந்தார் பும்ரா. இருப்பினும் ஆடும் லெவனில் இவர் இடம்பெறவில்லை. இதனால், ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு கேள்விகள் ரசிகர்களிடம் எழுந்தன.
இதையடுத்து, சமீபகாலமாக அவருக்குத் தொந்தரவு தரும் முதுகு வலி மீண்டும் ஏற்பட்டதையடுத்து இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பும்ரா விலகியுள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது.
இதையும் படிங்க :ரொனால்டோ, மெஸ்ஸிக்கு நிகராக ஜொலித்து வரும் இந்திய வீரர்! சுனில் சேத்ரியை புகழ்ந்த பிஃபா..
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரிலிருந்து விலகிய பும்ராவுக்குப் பதிலாக சிராஜைத் தேர்வு செய்துள்ளது பிசிசிஐ. மேலும், பும்ராவை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரின் முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி வென்றுள்ள நிலையில், நாளை மறுநாள் இரண்டாவது இருபது ஓவர் போட்டி நடைபெறவுள்ளது.