சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தளத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கே.கே.நகரில் உள்ள புறநகர் அரசு மருத்துவமனையின் மேற்பகுதியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தளத்திற்கு கீழுள்ள அறையில் பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 08) திடீரென மருத்துவமனையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. அப்போது அந்த அறையில் சிகிச்சை பெற்று வந்த பொதுமக்கள் பயத்தில் அலறல் சத்தம் போட்டனர். இதனால் கே.கே.நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு ஆனந்தமான செய்தி….
பிறகு, மருத்துவமனையின் மேற்பகுதியில் நடைபெறும் புனரமைப்பு பணியால் ஏற்பட்ட அதிர்வால் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது தெரியவந்தது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்துக்கு மருத்துவமனையின் தரம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேற்கூரை பெயர்ந்து விழுந்த இந்த விபத்தில் உயிர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.