‘தீபக் சஹாருக்கு பதிலாக மீதமுள்ள இரு ஒருநாள் போட்டிகளிலும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவார்’ என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்க அணி 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இருபது ஓவர் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில், இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்தது.
இதையும் படிங்க:இன்று முதல் தொடங்குகிறது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி..உற்சாகத்தில் ரசிகர்கள்!
இதையடுத்து, இரண்டாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, தீபக் சஹாருக்கு பதிலாக மீதமுள்ள இரு ஒருநாள் போட்டிகளிலும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி இருபது ஓவர் போட்டியின்போது தீபக் சஹாருக்கு முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஆதலால், முதல் ஒருநாள் போட்டியில் அவர், விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.