சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ‘மறக்குமா நெஞ்சம்’ பாடல் நாளை வெளியாகவுள்ளது.
நடிகர் சிலம்பரசன் மாநாடு திரைப்படத்தின் மூலம் கொடுத்த கம்-பேக்கை எவராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. சிலம்பரசன் நடிகர் சிலம்பரசனாக மீண்டும் வந்துவிட்டார் என்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியும், நம்பும்படியும் மாநாடு திரைப்படமும் சிம்புவின் நடிப்பும் இருந்தது.
மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிலம்பரசன் நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படமும், பத்து தல என்ற திரைப்படமும் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், சிலம்பரசன் – ஏ.ஆர்.ரஹ்மான் – கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணையும் வெந்து தணிந்தது திரைப்படத்தின் பாடல் ஒன்று இன்று வெளியாகவுள்ளது.
ஏற்கனவே, வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த டீசரின் பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்கும். அப்பாடலும் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.
இதைத் தொடர்ந்து, அப்பாடல் எப்போது வெளியாகும் என பலரும் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தனர். இந்நிலையில், இன்று ‘மறக்குமா நெஞ்சம்’ எனத் தொடங்கும் அப்பாடல் வெளியாகவுள்ளது. அதன்படி, நாளை மாலை 6. 21 மணியளவில் இப்பாடல் வெளியாக எனும் படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக, ஏ.ஆர்.ரஹ்மான் – கௌதம் வாசுதேவ் மேனன்-சிலம்பரசன் கூட்டணி விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற திரைப்படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.