Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇன்று இரண்டாம் ஒருநாள் போட்டி...தொடரை தக்கவைக்குமா இந்திய அணி?

    இன்று இரண்டாம் ஒருநாள் போட்டி…தொடரை தக்கவைக்குமா இந்திய அணி?

    முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததால் இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. 

    தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்க அணி 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

    இருபது ஓவர் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில், இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்தது.

    இந்நிலையில், இன்று ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததால் இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்த போட்டியானது பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இன்றைய போட்டியில் இந்திய அணி வென்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  

    இதையும் படிங்க: இந்திய அணியில் தீபக் சஹாருக்கு பதிலாக இடம்பிடித்த தமிழக வீரர்! நடந்தது என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....