சென்னையில் வருகிற 3 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் எப்போதும் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார்.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அதனை ஈடு செய்யும் விதமாக வருகிற சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் உள்ள ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தொடர் பெருமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 03.12.2022 அன்று (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.