Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் வருகிற சனிக்கிழமை பள்ளிகள் எப்போதும் போல் செயல்படும்; முதன்மை கல்வி அலுவலர்

    சென்னையில் வருகிற சனிக்கிழமை பள்ளிகள் எப்போதும் போல் செயல்படும்; முதன்மை கல்வி அலுவலர்

    சென்னையில் வருகிற 3 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் எப்போதும் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார். 

    கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அதனை ஈடு செய்யும் விதமாக வருகிற சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதே சமயம், ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் உள்ள ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    தொடர் பெருமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 03.12.2022 அன்று (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசியலமைப்பு சட்டத்தின் படி செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்து ஆளுநர் செயல்பட வேண்டும்; டிகேஎஸ் இளங்கோவன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....