Monday, May 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதிடீரென தீப்பிடித்த பள்ளிப் பேருந்து - சிறிதுநேரம் ஏற்பட்ட பரபரப்பால் அச்சமடைந்த மாணவர்கள்

    திடீரென தீப்பிடித்த பள்ளிப் பேருந்து – சிறிதுநேரம் ஏற்பட்ட பரபரப்பால் அச்சமடைந்த மாணவர்கள்

    அரக்கோணம் அருகே பள்ளி மாணவர்களை அழைத்து வர சென்ற பள்ளிப்பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    அரக்கோணம், ராணிப்பேட்டை அருகே தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கின்ற மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர பள்ளியில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், இன்று காலை அப்பள்ளி பேருந்து சேத்தமங்கலத்தில் 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது திடீரென பேருந்தின் முன்பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. 

    இதனை அறிந்த பேருந்து ஓட்டுநர், 4 மாணவர்களையும் உடனடியாக கீழே இறக்கிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

    தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதன்காரணமாக, அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....