நிச்சயமாக அதிமுகவிற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன் என அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள தனது இல்லத்தில் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
பின்னர் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களை சசிகலா சந்தித்தார். அப்போது சசிகலாவிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: ஓபிஎஸ் படம் நீக்கப்பட்டதா? தலைமை அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்
அந்தச் செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
அண்ணாவின் பாதையில் நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம். நேரம் வரும்போது நிச்சயம் கட்சி அலுவலகத்திற்கு செல்வேன். திமுக அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை என போகும் இடங்களில் எல்லாம் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏழை, எளிய மக்களுக்காக அம்மா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்துவது அவர்களுக்கு நல்லதல்ல.
இவ்வாறாக அவர் கூறினார்.
மேலும், பன்னீர்செல்வத்தை நேரில் எப்போது சந்திப்பீர்கள் என்ற கேள்விக்கு? நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என அவர் பதிலளித்தார். அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி, பழைய பழனிச்சாமி இல்லை எனக் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் எப்படி இருக்கிறார் என நீங்கள்தான் கூற வேண்டும் என்றார். நிச்சயமாக அதிமுகவிற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒன்றிணைந்து நல்ல வெற்றிகளை பெறும் எனவும் சசிகலா தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடிச்சிகாட்டுங்கடா பாப்போம் யாரு பெரிய ஆளுனு