Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஓபிஎஸ் படம் நீக்கப்பட்டதா? தலைமை அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்

    ஓபிஎஸ் படம் நீக்கப்பட்டதா? தலைமை அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்

    அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெற்றிருந்த பழைய பேனர்கள் அகற்றப்பட்டு, புதிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ள நிகழ்வு கட்சித் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்படுவது தொடர்பாக கடந்த ஜூலை 11-ஆம் தேதி அன்று சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அங்கு கூட்டம் நடைபெற்ற அதே நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் ஆதரவாளர்கள் இறங்கினர் .

    அப்போது ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு மிகப்பெரிய கலவரத்தில் முடிந்தது. இந்த மோதலில் அதிமுக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் முழுமையாக சேதம் அடைந்தது மட்டுமின்றி அலுவலக பொருட்களும் சூறையாடப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: அடிச்சிகாட்டுங்கடா பாப்போம் யாரு பெரிய ஆளுனு – அண்ணா பிறந்தநாள் மோதல்

    இந்த மோதல் தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜூலை 21-ஆம் தேதி அன்று சீல் அகற்றப்பட்டு, அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கட்சியின் அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய பின்னர், எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகம் வந்து தொண்டர்களை சந்தித்து பேசி தனது பலம் என்ன என்பதை நிரூபித்தார் . அதுமட்டுமின்றி அவர் அலுவலகம் வந்தபோது அங்கு பேனர்கள் வைக்கப்படாமல் இருந்தது .

    இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் இருந்த புகைப்பட பேனர்கள் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களுடன் எடப்பாடி பழனிசாமி அவர்களின் புகைப்படமும் இடம் பெற்றிருக்கக் கூடிய புதிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    அலுவலகத்தின் பிரதான நுழைவுவாயில், சுற்றுச்சுவரின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ள இந்த புதிய பேனர்களில் ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படங்கள் இல்லாதது, அவரது ஆதரவாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் நீதிமன்ற வழக்குகள் மூலம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரின் கைகள் மாறிமாறி வலுப்பெற்று வந்தாலும், தற்போது எடப்பாடி பழனிசாமியின் கைகளே கட்சிக்குள் ஓங்கியுள்ளதாய் இதுபோன்ற நிகழ்வுகள் காட்டுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....