‘ராஜஸ்தானின் பாம்பு மனிதன்’ என்று அழைக்கப்பட்ட நபர் ராஜ நாகம் கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சூரூ மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பாம்பு பிடித்து வந்தவர் தான் வினோத் திவாரி என்ற நபர். இந்த நபரை அப்பகுதி மக்கள் ‘பாம்பு மனிதர்’ என்று தான் அழைப்பார்கள்.
இந்நிலையில், கொஹமெடி என்ற பகுதியில் கடைக்குள் புகுந்த கொடிய விஷமிக்க ராஜ நாகத்தை பிடித்த வினோத் திவாரி பையில் அடைக்க முயற்சித்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு அவரைத் தீண்டியது. இதையடுத்து, சில நிமிடங்களில் வினோத் திவாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், இவர் பாம்பு தீண்டி உயிரிழந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The video is from Churu, #Rajasthan. As soon as Vinod Tiwari, who came to catch the #snake, put the cobra in the bag, the #cobra bite Vinod.
Vinod died within a few minutes. 1/2#Viral #ViralVideo #snakebite #india pic.twitter.com/SM5NK34GmS
— Siraj Noorani (@sirajnoorani) September 14, 2022