Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்துப்பாக்கி உரிமம் வேண்டும்- நடிகர் சல்மான்கான் கோரிக்கை

    துப்பாக்கி உரிமம் வேண்டும்- நடிகர் சல்மான்கான் கோரிக்கை

    நடிகர் சல்மான் கான் நேற்று (ஜூலை 22) மும்பை மாநகர காவல் ஆணையரகத்தில் துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.

    பாலிவூட் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சல்மான் கான். இவர் நேற்று (ஜூலை 22) மும்பை மாநகர காவல் ஆணையகரத்துக்குச் சென்றார். அப்போது, மும்பை காவல் ஆணையர் பன்சால்கரை சல்மான் கான் சந்தித்தார். 

    அதனைத் தொடர்ந்து, மும்பை மாநகர காவல் ஆணையத்தில் நடிகர் சல்மான்கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்டு விண்ணப்பித்தார்.

    முன்னதாக, நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தைக்கும் மர்ம நபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த கொலை மிரட்டல் கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    நடிகர் சல்மான் கானுக்கு வந்த கொலை மிரட்டல் கடிதத்தில், சித்து மூஸ்வாலாவுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்படும் என கூறப்பட்டு இருந்தது. சித்து மூஸ்லா என்பவர் பஞ்சாப் பாடகர் ஆவார். இவர் கடந்த மே மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    முதல் ஒருநாள் போட்டியில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....