மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தின் முதல்படியாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.
அதன்படி, கடந்த ஜூலை 22-ம் தேதி இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மேற்கிந்திய தீவுகளில் உள்ள குயின்ஸ் பார்க் மைதானமத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில், இந்திய அணி ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கியது. முதலில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கியது. 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணித்தரப்பில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 97 ரன்களும், சுப்மன் கில் 64 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 54 ரன்களும் எடுத்தனர்.
மேலும், மேற்கிந்திய அணித்தரப்பில், அல்சாரி ஜோசப் மற்றும் குடகேஷ் மோட்டி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில், 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. மொத்தம் 50 ஓவர்களுக்கு 306 ரன்கள் மட்டுமே மேற்கிந்திய தீவுகள் அணி எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், கைல் 75 ரன்களும், பிராண்டன் கிங் 54 ரன்களும், ஷமரா பூருக்ஸ் 41 ரன்களும் எடுத்தனர்.
இதன்மூலம், மூன்று ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிப்பெற்றது. இந்திய அணித்தரப்பில், முகமது சிராஜ் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 3 ரன்களில் சதத்தை தவறவிட்டு 97 ரன்கள் எடுத்த ஷிகர் தவானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
மேலும், இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வருகிற ஜூலை 24-ம் தேதி மேற்கிந்திய தீவுகளில் உள்ள குயின்ஸ் பார்க் மைதானமத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வீரர்கள் தேர்வு