தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு சென்னையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் கலந்துக்கொள்ளும் வீரர்களை தேர்வு செய்யும் பணியானது மாவட்டங்கள் தோறும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட அணிக்காக விளையாடும் வீரர்களை தேர்வு செய்யும் நிகழ்வானது வரும் ஜூலை 24-ம் தேதி சென்னை பெசன்ட் நகரில் உள்ள கிரிக்கெட் வலைப்பயிற்சி மைதானத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் கிரிக்கெட் வீரர்கள் தங்களின் ஆதார் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இத்தகவலை மயிலாடுதுறை மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயதுக்கு உள்பட்டவர்கள் (1.09.2006 அன்றும், அதன்பிறகும் பிறந்தவர்கள்) மற்றும் 19 வயதுக்கு உள்பட்டவர்கள் (1.09.2003 அன்றும், அதன் பிறகும் பிறந்தவர்கள்) அணிகளுக்கான தேர்வு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு