Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஜிஎஸ்டி விலை உயர்வால் பம்ப்செட் விற்பனை 50 சதவீதம் சரிவு

    ஜிஎஸ்டி விலை உயர்வால் பம்ப்செட் விற்பனை 50 சதவீதம் சரிவு

    ஜிஎஸ்டி வரி உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வால், வீடு மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான பம்ப்செட் விற்பனை, 50 சதவீதம் குறைந்துள்ளது என கோவை தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்தியா முழுவதும் வீடு மற்றும் விவசாயத்துக்கு பயன் படுத்தப்படும் பம்ப்செட்டுகளில் சுமார் 55 சதவீதம் தமிழகத்தின் கோயம்புத்தூரில் உள்ள தொழில் நுட்ப நிறுவனங்களில் தயாரிக்கப்படுகிறது.

    கோவையில் மட்டும், 500க்கும் மேற்பட்ட பம்ப்செட் தயாரிக்கும் நிறுவனங்களும், ஆயிரத்துக்கும் அதிகமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் செயல்படுகின்றன. பம்ப்செட் உற்பத்தியில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

    கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களின் மூலம், 0.5 ஹெச்.பி முதல் 50 ஹெச்.பி திறன் கொண்ட பம்ப்செட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் விலை சுமார் 1500 ருபாய் முதல், 4.5 லட்சம் ருபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

    இந்நிலையில், ஜிஎஸ்டி வரி உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வால், பம்ப்செட்களின் விளையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையின் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தென்னிந்திய இன்ஜினியரிங் உட்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் விக்னேஷ் கூறியதாவது:

    பம்ப்செட் உற்பத்தி செலவு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் ஏற்கனவே விலை 40 சதவீதம் உயர்ந்த நிலையில், தற்போது 6 சதவீதம் உயர்ந்து 46 சதவீதமாக விலை உயர்ந்துள்ளது.

    இந்த விலை உயர்வு காரணமாக நாடு முழுவதும் வீடு மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான பம்ப்செட் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது.

    சரக்கு வரி சேவை குறைப்பு, நியாயமான விலையில் உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றை அரசு உறுதி செய்தல் நெருக்கடியிலிருந்து இந்த தொழில் மீண்டு வர உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....