தமிழக அரசு ஊழியர்களைத் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவோருக்கும் உயர்கிறது அகவிலைப்படி

47
TN secretariat

தமிழக அரசு ஊழியர்களைத் தொடர்ந்து, ஓய்வூதியம் பெறுவோருக்கு அகவிலைப்படியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின், அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து, 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். என அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி அரசனை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசனைகளில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் தொகுப்பூதியம், நிலைப்படுத்தப்பட்ட ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு ஏற்கனவே கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

மாதம் ரூ.2500 ஊதியம் பெறுவோருக்கு ரூ.50ம், மாதம் ரூ.2,500க்கு அதிகமாக பெறுவோருக்கு ரூ.100ம் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு, உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள், மேல்நிலைத்தொட்டி ஆப்பரேட்டர்கள், ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கும் பொருந்தும்.

அதேபோல, 2006ம் ஆண்டுக்கு முன் சம்பள விகிதம் மாற்றி அமைக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஜூலை 1ம் தேதி முதல், 368 சதவீதத்தில் இருந்து 381 சதவீதமாகவும், 2016ம் ஆண்டில் சம்பள விகிதம் மற்றும் தர ஊதியம் அமைக்கப்பட்டவர்களுக்கு 196 சதவீதத்தில் இருந்து 203 சதவீதமாகவும் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றி, உயிரிழந்தவர்களின் மனைவி மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு மாதம் ரூ.645 வழங்கப்படுகிறது.

இவர்களுக்கான அகவிலைப்படி, மத்திய அரசு உயர்த்தியுள்ளது போல 360 சதவீதத்தில் இருந்து 373 சதவீதமாக ஜூலை 1 முதல் உயர்த்தப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படித் தொகை, அவரவர் வாங்கி கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.