இருபது ஓவர் உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது.
2022-ம் ஆண்டுக்கான சர்வதேச இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16-ம் தேதி தொடங்கவுள்ள இருபது ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா செல்கிறது.
இந்நிலையில், உலகக்கோப்பையில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மற்றும் இந்திய அணி குழுவினர் இடம்பெற்றுள்ள புகைப்படம் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நாங்கள் விடையைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம் – ரோஹித் சர்மா பேச்சு!
அறிவிக்கப்பட்ட இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), பாண்டியா, ஆர். அஸ்வின், சஹால், அக்ஷர் படேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
அறிவிக்கப்பட்ட இந்த அணியில் இடம்பெற்ற பும்ரா தற்போது உலகக் கோப்பையில் காயம் காரணமாக விளையாடமாட்டார் என்ற தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் முகமது ஷமி பும்ராவிற்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.