வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மூன்று இந்திய அணி வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றியுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா, தீபக் சஹார், குல்தீப் சென் ஆகிய மூன்று இந்திய வீரர்களும் விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேட்ச் பிடிக்க முயன்றபோது ரோஹித் சர்மாவின் விரலில் காயம் ஏற்பட்டது. அதே போட்டியில் மூன்று ஓவர்கள் மட்டும் வீசிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார், அதன்பிறகு காயம் காரணமாகப் பந்துவீசவில்லை.
முன்னதாகவே, குல்தீப் சென் காயம் காரணமாக 2-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் தேர்தல்; வெற்றிப்பெற்ற ரவீந்திர ஜடேஜாவின் மனைவி..