Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமாண்டஸ் புயல் எச்சரிக்கை! தயார் நிலையில் இருக்கிறதா சென்னை?

    மாண்டஸ் புயல் எச்சரிக்கை! தயார் நிலையில் இருக்கிறதா சென்னை?

    புயல், கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் மழைநீரை அகற்ற 805 மோட்டார் பம்புகள் தயார்நிலையில் இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

    வங்க கடலில் உருவாகி இருக்கும் மாண்டஸ் புயல், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இந்நிலையில் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    புயலினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டால் உடனடியாக வெளியேற்ற 805 மோட்டார் பம்புகள் தயார்நிலையில் உள்ளன. பொதுமக்களை தங்க வைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன. 

    புயல் கரையைக கடக்கும் போது மணிக்கு 80 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால், காற்றின் வேகத்தின் காரணமாக விழும் மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்காக 272 மர அறுவை எந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 2 மர அறுவை எந்திரங்கள், 6 ஹைட்ராலிக் மர அறுவை எந்திரங்கள், ஒரு பகுதிக்கு ஒரு பொக்லைன் என 45 பொக்லைன் வாகனங்கள், 115 டிப்பர் லாரிகள் தயார்நிலையில் உள்ளன.

    ஒவ்வொரு வார்டிலும் அவசர கால தேவைக்காக ஒரு சிறிய இலகுரக வாகனம் மற்றும் 10 பணியாளர்களை தயார்நிலையில் வைத்திருக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புயல் கரையை கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மரங்களின் அருகாமையில் நிற்பதையோ அல்லது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களின் கீழ் நிற்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

    புயல் மற்றும் மழையின் போது பொதுமக்கள் தங்களின் அவசரத் தேவைக்காக அல்லது புகார்களை தெரிவிக்க மாநகராட்சியின் 1913 உதவி எண்ணிலும், 044-2561 9206. 044-2561 9207 மற்றும் 044-2561 9208 ஆகிய தொலைபேசி எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    பொதுமக்களின் புகார்களை விரைந்து பெறவும், அதன்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் ஏதுவாக, 10 இணைப்புகளுடன் செயல்பட்டு வந்த 1913 உதவி எண்ணானது, 50 இணைப்புகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்க உத்தரவு; தலைமை செயலாளர் இறையன்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....