Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவிபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்; எரிந்த கார்..

    விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்; எரிந்த கார்..

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த் டெல்லிக்கு சென்றுக் கொண்டிருந்த போது அவர் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. 

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர், ரிஷப் பந்த். இவர் நேற்று ரூர்க்கியில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் டெல்லி சென்றுக்கொண்டிருந்தார். 

    அப்போது எதிர்பாராத விதமாக ரிஷப் பந்தின் கார், உத்தரகாண்ட் மாநிலம் ஹம்மாத்பூர் ஜால் அருகே ரூர்க்கியின் நர்சன் எல்லையில் விபத்துக்குள்ளானது. கார் டிவைடரில் மோதியதில் தீப்பிடித்ததுள்ளது. விபத்து நேர்ந்ததும் பந்த் தாமாக முயன்று கண்ணாடியை உடைத்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

    மேலும், ரிஷப் பந்த் முதலில் ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

    தற்போது வெளிவந்துள்ள தகவல்களின்படி, ரிஷப் பந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைசமயம், அவரின் தலையிலும், காலிலும் பலத்த அடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் ரிஷப் பந்த் விரைவில் குணமடைய வேண்டுமென தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். 

    குற்றால அருவியில் தவறி விழுந்த 4 வயது சிறுமி; துணிச்சலுடன் மீட்ட இளைஞர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....