Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கையின் இடைக்கால அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே

    இலங்கையின் இடைக்கால அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே

    இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே ஜூலை 16 அன்று பதவியேற்றுள்ளார். 

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கே மாபெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

    இலங்கை மக்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜிநாமா செய்தார். இருப்பினும், மக்களின் போராட்டமானது ஓயவில்லை. 

    இலங்கையில் தொடர்ந்து போராட்டங்கள் நீடித்த நிலையில், ஜூலை 9-ம் தேதி  போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். 

    இதையடுத்து இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோத்தபய ராஜபக்சேவும், ரணில் விக்ரம சிங்கேவும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர். கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் ராணுவ விமானத்தின் மூலம் மாலத்தீவுக்கு தப்பிவிட்டதாக தகவல்கள் வெளிவந்தது.

    கடந்த 13-ம் தேதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளதாக, இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த அபேவர்தனே அறிவித்தார். 

    அதன்படி, இன்று இலங்கையில் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே அந்நாட்டின் தலைமை நீதிபதி முன்பு பதவியேற்றுக்கொண்டார்.

    மேலும், இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய வருகிற 20-ம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. 

    இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்கும் முன்பு, இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகினார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே, அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    இலங்கை மக்களின் குறைகளை சீர்செய்வது மிகவும் முக்கியம்- ஐ.நா. பொதுச்செயலாளர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....