பழங்குடியினர் பட்டியல் சார்ந்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களான நரிக்குறவர்கள், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருப்பதாவது:
இதையும் படிங்க: முதல்வரின் காலை உணவு திட்டம் – மருத்துவர் ராமதாசு வரவேற்பு
நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் ஆகிய சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!
தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்களின் சமூக நீதியை முழுமையாக உறுதி செய்ய, அவர்களுக்கு உடனுக்குடன் சாதி சான்றிதழ் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்!
இவ்வாறு தெரிவித்துள்ளார்.