Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ரஜினி - நெல்சன் கூட்டணி இணையும் திரைப்படத்தின் டைட்டில் இதுதானா? செம்ம மாஸா இருக்கே!

    ரஜினி – நெல்சன் கூட்டணி இணையும் திரைப்படத்தின் டைட்டில் இதுதானா? செம்ம மாஸா இருக்கே!

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு இன்று வெளியாகியுள்ளது. இது, ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படமாகும்.

    இதற்கு முன்னதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி நடித்திருந்த திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தினை இயக்குனர் சிவா எடுத்திருந்தார்.

    குடும்பத் திரைப்படமாக உருவான அண்ணாத்த, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இது போல நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த பீஸ்ட் திரைப்படமும் படுதோல்வியினைச் சந்தித்தது.

    இந்த நிலையில், பீஸ்ட் திரைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போதே ரஜினி நடிக்கும் அடுத்த திரைப்படத்தினை நெல்சன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. 

    ஆனால் பீஸ்ட் திரைப்படத்தின் படுதோல்வியினையடுத்து ரஜினியின் திரைப்படத்தினை இயக்குவதிலிருந்து நெல்சன் நீக்கப்படலாம் என்ற கருத்துகளும் பரவத்தொடங்கின. அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல நெல்சன் தான் ரஜினியின் அடுத்த திரைப்படத்தினை இயக்கப்போகிறார் என்கிற அறிவிப்பினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

    இந்த நிலையில், நெல்சன்-ரஜினி கூட்டணியின் புதிய திரைப்படத்திற்கான தலைப்பினை இன்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜெயிலர் என்ற தலைப்பிட்ட இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

    ஜெயில் கைதிகளின் வாழ்க்கையினை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாவதால் ஜெயிலர் என்று பெயரிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் ரஜினி ஜெயிலர் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

    ரஜினியுடன் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடன் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த படத்திற்கு திரைக்கதையினை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் எழுதப்போகிறார் என்கிற தகவல்கள் கசிந்த நிலையில், நெல்சன் தான் இப்படத்திற்கு திரைக்கதை எழுதவுள்ளார் என்றும், கே.எஸ்.ரவிக்குமார் நடிகராக மட்டுமே இத்திரைப்படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

    பல்வேறு இந்திய மொழிகளில் உருவாக்கப்படும் இந்த திரைப்படமானது, அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நரம்புத் தளர்ச்சியை தீர்த்துக்கட்டும் எளிய நாட்டு வைத்திய முறைகள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....