பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசஸ் அருகில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, அமிர்தசரஸில் இருந்து மேற்கு-வடமேற்கில் 145 கிமீ தொலைவில் இன்றுஅதிகாலை 3.42 மணியளவில் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளதாகவும், பூமிக்கு அடியில் 120 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று இதுவரை வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நேபாளம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இவற்றில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லி வரையில் உணரப்பட்டது. அதேபோல, அருணாச்சல பிரதேசத்திலும் சமீபத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேதியியல் பிரிவில் பட்டம் பெற்று வேலை தேடுபவரா? உங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு…