Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிஎம்.ஜி.ஆர் நினைவு தினம்; மரியாதை செலுத்திய புதுச்சேரி முதல்வர்..

    எம்.ஜி.ஆர் நினைவு தினம்; மரியாதை செலுத்திய புதுச்சேரி முதல்வர்..

    மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் 35-ஆவது நினைவு தினம் புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணன் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதேபோன்று அதிமுக சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக வந்து எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும், அமைப்புகள் சார்பிலும் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், பொது மக்களும் அவரது ரசிகர்களும் எம்.ஜி.ஆரின் புகைப்படங்களை வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 

    பழுதடைந்தவைகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடில்; மக்களை கவர்ந்த ஓவிய ஆசிரியர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....