தமிழ்நாட்டில் பொதுத் தேர்வு எழுத வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் கொண்டுவரத் தடை விதித்து அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன. தொடர்ந்து 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்க உள்ளன. இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
இந்நிலையில், தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள் செல்போன் மற்றும் தகவல் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்த தடை விதித்து தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோன்று, தேர்வு அறைக்குள் வரும் ஆசிரியர்களும் செல்போன் மற்றும் தகவல் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறி செல்போன் பயன்படுத்தும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்