Sunday, March 17, 2024
மேலும்
    Homeவானிலைஅடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்

    அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்

    சென்னை: சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று நண்பகல் 12.30 மணிக்கு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 

    10.03.2023 முதல் 11.03.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

    12.03.2023 முதல் 14.03.2023 வரை: தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-34 டிகிரி செல்ஸியஸ் அளவிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்ஸியஸ் அளவிலும் இருக்கக்கூடும். 

    மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

    10.03.2023 முதல் 11.03.2023 வரை: 

    மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

    மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென்று அறுவுறுத்தப்படுகிறார்கள். 

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....