புரோ கபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசன் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
12 அணிகள் பங்கேற்ற இந்த புரோ கபடி போட்டியானது, புனே, ஐதரபாத், பெங்களூரு போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. லீக், காலிறுதி, அரையிறுதிப் போட்டிகள் முடிவடைந்து இன்று இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.
முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளும், புனேரி பல்தான் மற்றும் தமிழ்த் தலைவாஸ் அணிகளும் ஆட்டம் கண்டன. இவற்றுள் புனேரி பல்தான் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றிப்பெற்று இன்று இறுதிப்போட்டியில் களம் காணவுள்ளன.
இந்தப் போட்டியானது இன்று இரவு 8 மணிக்கு அகமதாபாத்தில் தொடங்கவுள்ள நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
துணிவு படத்தில் அஜித் எப்படி? – தகவலை சொன்ன இயக்குநர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்