இலங்கையில் வரும் 20-ம் தேதி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபெய்வர்தனே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கே மாபெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இலங்கை மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
போராட்டங்களின் விளைவாக, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனையடுத்து போராட்டங்கள் தொடர்ந்து வலுப்பெற்ற வந்தமே இருந்தன.
கடந்த சனிக்கிழமை, அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார்.
இதனையடுத்து, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, 13-ம் தேதி தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்வதாக தெரிவித்தார். புதிய அரசு அமைந்ததும் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார்.
இந்நிலையில், அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கிய புதிய அரசு அமைப்பது குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை, அதிபர் கோத்தபய ராஜினாமா செய்ததும், வருகிற 15-ம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்டி புதிய அதிபர் பதவிக்கான தேர்தல் குறித்து அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அவசர மருத்துவ ஊர்தி சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிதி ஆயோக் அமைப்புக்கு புதிய தலைமை செயல் அதிகாரி நியமனம்