Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅஞ்சல் துறையில் காலிப்பணியிடங்கள்

    அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்கள்

    கோயம்பத்தூர் அஞ்சல் அலுவலகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோயம்பத்தூர் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இந்திய அஞ்சல் துறை சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    விளம்பர எண். DMMS/E-123/2021/01 கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் பின்வரும் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

    மெக்கானிக்- 02

    எலெக்ட்ரீசியன்- 01

    வெல்டர்- 01

    கார்பெண்டர்- 01

    டயர் மேன்- 01

    காப்பர் மாற்றும் டின்ஸ்மித்- 01

    சம்பள விவரம்: காலிப்பணியிடங்களுக்கான சம்பளம் மாதம் 19,900 முதல் 63,200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கல்வித் தகுதி: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மெக்கானிக் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கனரக, இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

    வயது வரம்பு: 01.07.2021ம் தேதிப்படி, விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். அரசு விதிகளின் படி, இடஒதுக்கீடு பிரிவினருக்கு சலுகை அளிக்கப்படும்.

    தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு முறை.

    தேர்வு கட்டணம்: தேர்வு பதிவு கட்டணம் ரூ.100, தேர்வுக்கட்டணம் ரூ.400 ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இந்தியன் போஸ்டல் ஆர்டராக எடுத்து அனுப்ப வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

    விண்ணப்பிக்கும் முறை: இந்திய அஞ்சல் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் (சுய சான்று செய்யப்பட்ட) இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி: மேனேஜர், மெயில் மோட்டார் சர்வீஸ், கூட்ஸ் ஷெட் ரோடு, கோய்ம்பத்தூர்- 641 001.

    விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய கடைசி தேதி: 01.08.2022

    இந்திய உளவுத்துறையில் வேலைவாய்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....