Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பிப்ரவரி-14 அன்று பொன்னியின் செல்வன் படக்குழு செய்யப்போகும் காரியம்...

    பிப்ரவரி-14 அன்று பொன்னியின் செல்வன் படக்குழு செய்யப்போகும் காரியம்…

    பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலிருந்து வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி பாடல் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகிய திரைப்படம்தான், பொன்னியின் செல்வன். 

    கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. 

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளிவந்து பற்பல சாதனைகளை நிகழ்த்தியது. குறிப்பாக, 450 கோடி என்ற மாபெரும் வசூல் சாதனையை புரிந்தது. 

    இதைத்தொடர்ந்து, சமீபத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து பாடல் ஒன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    மேலும், இப்பாடல் அருண்மொழி வர்மன் மற்றும் வானதிக்கும் இடையேயான காதலை மையமாகக் கொண்டு அமைந்துள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இப்பாடலை பாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

    சாக்லேட் தினம் என்பது வெறுமனே சாக்லேட்டை பகிர்தல் மட்டும் அல்ல!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....