மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, இறைச்சி வாங்க மக்கள் ஆர்வமுடன் சென்றனர்.
தைத் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து லட்ச கணக்கான மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
முதல் நாள் பொங்களான நேற்று, பலரும் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து உண்டனர்.
இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று, மாடு இருக்கும் வீடுகளில் அவற்றை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதே சமயம், பலரின் வீடுகளிலும் இறைச்சி எடுப்பது வழக்கம். அந்த வகையில் காசிமேடு, நாகை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மக்கள் மீன் வாங்க சென்றனர். மேலும் கோழி, ஆட்டுகரி வாங்கவும் ஆர்வம் காட்டினர். இதனால் அதிகாலையில் இறைச்சி கடைகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
‘பொங்கலோ பொங்கல்’ – மாட்டுப் பொங்கல் ஒரு சிறப்பு பார்வை