Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகாதலிக்காக இத கூடவா திருடுவாங்க? தொடர் வாகன திருட்டில் சிக்காதவர்.. நாயால் சிக்கிய கதை

    காதலிக்காக இத கூடவா திருடுவாங்க? தொடர் வாகன திருட்டில் சிக்காதவர்.. நாயால் சிக்கிய கதை

    திருடன் ஒருவன் தனது காதலிக்கு பரிசளிப்பதற்காக நாய் ஒன்றை திருடியதால் காவல்துறையினர் அவனை கைது செய்துள்ளனர். 

    சென்னை, சாலிகிராமம் மற்றும் விருகம்பாக்கம் பகுதிகளில் இருசக்கர வாகனங்களையும் அதன் பேட்டரிகளையும் குறிவைத்து திருடி வந்த ஒரு இளைஞனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

    இவர் தொடர்ந்து, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், சம்மந்தப்பட்ட நபர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதனிடையே அந்த நபர் 22 வயதுடைய சுஜித் என்பதும் அவர், சாலிகிராமம் தசரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இருப்பினும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சுஜித்தை கைது செய்ய முடியாத நிலை நீடித்து வந்தது. 

    இதனிடையே, சுஜித் தனது காதலியை மகிழ்விக்க உயர் ரக நாய் ஒன்றை திருடியிருக்கிறான். இது தொடர்பாக நாயின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த கவால்துறையினர், அவன் இருக்கும் பகுதிகளை ஆராய்ந்து அவனை பின்தொடர்ந்து சென்றனர். 

    பிறகு சுஜித்தை கைது செய்தனர். மேலும் நாய், இரு சக்கர வாகனங்கள், அவற்றின் பேட்டரிகள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதையும் படிங்க: போலி கணக்குகள்..’ப்ளூ டிக்’ கட்டணம்…மீண்டும் வேலைக்கு வர அழைப்பு: அதிரடி காட்டும் எலான் மஸ்க்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....