Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'நரேந்திர மோடியின் உரை ஆணவமானது' - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன காட்டம்!

    ‘நரேந்திர மோடியின் உரை ஆணவமானது’ – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன காட்டம்!

    பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற உரை ஆணவமானது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார். 

    நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரை மீது பிரதமர் நரேந்திர மோடி உரை ஆற்றினார். கடந்த 8 ஆம் தேதி மக்களவையிலும், நேற்று 9 ஆம் தேதி மாநிலங்களைவையிலும் அவர் உரை ஆற்றினார். 

    இந்நிலையில், பிரதமரின் உரையை மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

    இன்று தில்லியில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடி தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதாகவும், அரசுக்கு எதிராக தாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை எனவும் கூறினார். 

    தொடர்ந்து பேசிய அவர், வேலைவாய்ப்பின்மை குறித்தோ, பணவீக்கம் குறித்தோ, அதானி விவகாரம் குறித்தோ மோடி பேசவில்லை எனவும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதாகவும், இதுகுறித்தும் பிற விவகாரங்கள் குறித்தும் பிரதமர் மோடி பேசவில்லை எனவும் குற்றம் சாட்டினார். 

    மேலும் மோடியால் மட்டும் தான் நாட்டை காப்பாற்ற முடியும் என அவர் கூறி உளளார்; இது ஆணவமான பேச்சு என மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டார். 

    கருவுற்றிருப்பதாக கூறி நாடகமாடிய பெண்; போராடிய கணவன்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....