பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள லுசோன் தீவின் அப்ரா மாகாணத்தில் கடந்த ஜூலை 27-ம் தேதி காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால், இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 150 பேர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் 450-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமாகியுள்ளதாக அப்ரா மாகாண அரசு தெரிவித்துள்ளது.