Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும்' - பாகாசூரன் பாட்டு குறித்து இயக்குநர் பதிவு!

    ‘படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும்’ – பாகாசூரன் பாட்டு குறித்து இயக்குநர் பதிவு!

    செல்வராகவன் நடிக்கும் பாகாசூரன் திரைப்படத்திலிருந்து ‘காத்தம்மா’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

    ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது இயக்குநர் செல்வராகவனை வைத்து ‘பகாசூரன்’ என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    நடிகர் நடராஜ், ராதாரவி, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சாம்.சிஎஸ் இசைமையத்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து, ‘பகாசூரன்’ திரைப்படத்தில் இருந்து ‘ சிவ சிவாயம்’ எனும் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘பகாசூரன்’ திரைப்படத்தில் இருந்து தற்போது ‘காத்தம்மா’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் துள்ளல் வகைப்பாடலாக உருவாகியுள்ளது. 

    இப்பாடல் குறித்து இப்படத்தின் இயக்குனர் மோகன்.ஜி, “படத்திற்கு தேவை உள்ளதால் இந்த மாதிரியான துள்ளல் பாடல் இடம்பெற்றுள்ளது.. பகாசூரன் திரைப்படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும்.. பாடலை கேளுங்கள்.. பிடித்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றி” எனத் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: தெலுங்கில் கால்தடம் பதிக்க உள்ள ‘மேயாத மான்’ நடிகை…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....