கேரளாவில் பள்ளி சுற்றுலா சென்ற 15 வயது மாணவர்கள் 3 பேர் மாங்குளம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பள்ளி சுற்றுலா சென்ற 15 வயது மாணவர்கள் 3 பேர் மாங்குளம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
நேற்று முன்தினம் அங்கமாலியில் உள்ள ஜோதிஸ் சென்ட்ரல் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் பள்ளி சுற்றுலாவுக்காக மாங்குளம் சென்று இருந்தனர்.
இந்நிலையில், ஆற்றில் ஆழம் குறைந்த பகுதியில் 5 மாணவர்கள் சிக்கினர். இதையடுத்து, மற்ற மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
அவர்களில் இரண்டு மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் 3 மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இசையின் அதீத சத்தத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்த மணமகன்