Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஆஸ்கர் வென்ற இந்திய படங்கள்; தலை வணங்குவதாக அறிவித்த ரஜினிகாந்த்..

    ஆஸ்கர் வென்ற இந்திய படங்கள்; தலை வணங்குவதாக அறிவித்த ரஜினிகாந்த்..

    ஆஸ்கர் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள படங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    திரையுலகின் மிக முக்கிய விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் விருது. இந்த விருது வழங்கும் விழாவானது இன்று காலை அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் தொடங்கியது.

    இதில் சிறந்த பாடல் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்தியாவின் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் விருதை வென்றுள்ளது. இந்த விருதை இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியும் (மரகதமணி), பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.

    மேலும், சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதை இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் வென்று சாதனை படைத்துள்ளது. 

    இதைத்தொடர்ந்து, ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள், பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் ராஜமௌலிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தி எலிஃபன்ட் வில்பரர்ஸ் படத்தின் இயக்குநர் கார்த்திகி மற்றும் கோன்சால்வ்ஸ்க்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    மேலும், ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள பெருமை மிக்க இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு தலை வணங்குகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

    ஆஸ்கரை கைப்பற்றிய அவதார்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....