தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ் அலெர்ட் எனப்படும் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் 8 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
திருவல்லிக்கேணி, எழுபுர், மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், திருவான்மியூர் உள்பட நகரின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னையின் புறநகர்ப் பகுதிகாலன, தாம்பரம், குரோம்பேட்டை, வண்டலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி அநேரத்துக்கு 18 மாவட்டங்களில் கனமழை தொடரும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ் அலெர்ட் எனப்படும் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: பேருந்திற்குள்ளும் கொட்டித்தீர்த்த மழை; ‘ரெயின் கோட்’ உடுத்திய பயணி – கடுப்பில் மக்கள்!