Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடித்து துவம்சம்; இபிஎஸ் ஆதரவாளர்கள் மனு!

    ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடித்து துவம்சம்; இபிஎஸ் ஆதரவாளர்கள் மனு!

    போகும் இடங்களில் எல்லாம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடித்து துவம்சம் செய்வதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு அளித்து இருக்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    அப்போது பேசிய மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானோர் அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் ஆதரவாளர்கள் நேற்று இரவு 12 மணி வரை ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், விருதுநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பலராமன், தெற்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    அதிமுக

    அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் 23 ஆம் தேதி அன்று நடைபெற இருக்கும் நிலையில், இந்த பொதுக்குழுவில் எப்படியாவது, தான் பொதுச் செயலாளர் ஆகிவிட வேண்டும் என்று கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் திடீரென்று அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற பிரச்சனையை முன்னெடுக்க, இதனால் ஆவேசமடைந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களை கடுமையாக அர்ச்சித்து வருகின்றனர்.

    ஒற்றைத்தலைமை விவகாரத்தில் மிகவும் தீவிரமாக இருக்கும் ஜெயக்குமாரை, ‘கட்சிக்கு துரோகம் செய்தவனே..’ என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக அர்ச்சித்து வருகிறார்கள் . அதேபோல் ஓபிஎஸ் வீட்டிற்கு சமாதானம் பேச சென்ற அதிமுக சீனியர்களையும் ரவுண்டு கட்டி நின்று, ‘இனிமேல் எங்க ஐயாவ பார்க்க வராதீர்கள். சமாதானப்படுத்த வராதீர்கள் . சமாதானப்படுத்தி சமாதானப்படுத்தியே அவரை உட்கார வச்சிட்டீங்க’ என்று எச்சரித்து அனுப்பி இருக்கிறார்கள்.

    நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்து உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி சேலத்துக்கு சென்றுவிட்ட நிலையில் பன்னீர்செல்வம் அவரது வீட்டில் இருந்த நிலையில், தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பெரும்பான்மையான ஆதரவாளர்கள் கூடி இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி உள்ளனர்.

    இதை தெரிந்துகொண்ட பன்னீர்செல்வம் அங்கு விரைந்து வர, அதற்குள் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர்களாக ஜெயக்குமாரும், சிவி சண்முகமும் தலைமை அலுவலகத்தை விட்டு வெளியேற, அதற்குள் அங்கு குவிந்துவிட்ட பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவர்களை சென்னை பாஷையில் கடுமையாக அர்ச்சித்தனர்.

    காரில் ஏறி எஸ்கேப் ஆக முற்பட்டபோது காரை அடித்து முழக்கம் எழுப்பினர். இதனால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவர்கள் அங்கிருந்து சென்றார்கள். இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அதிமுக பகுதி செயலாளர் பாலச்சந்திரன், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார்.

    அந்த புகார் மனுவில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து விட்டு வெளியே வந்த நிர்வாகிகள் மீதும் அவர்களின் கார்களின் மீதும், வேனில் வந்திறங்கிய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். தலைமை நிர்வாகிகளை ஆபாசமான வார்த்தைகளால் பேசி உள்ளனர். அதனால் தலைமை அலுவலகத்துக்கும் எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    ‘தாவரங்கள்தான் இதைத் தீர்மானிக்கின்றனவாம்’ – ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....