Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஓபிஎஸ் அதிமுகவின் துரோகி: ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு!

    ஓபிஎஸ் அதிமுகவின் துரோகி: ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு!

    அதிமுக கட்சியில் ஏற்பட்டு வரும் இருதரப்பு மோதலால், கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சிக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஓபிஎஸ் அணி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திலும், இது தொடர்பான விவாதங்கள் எழுந்தன நிலையில், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு செய்தார். இந்நிலையில், ஓபிஎஸ் மீது பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றைச் சாட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

    தொடக்க காலத்திலிருந்தே அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்தவர் ஓ. பன்னீர்செல்வம் என்றும், ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் என்றால் அது ஓ.பன்னீர்செல்வம் தான் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

    அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக நிர்வாகிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 4 நிர்வாகிகள் மட்டும் கூட்டத்திற்கு வர இயலவில்லை என கடிதம் கொடுத்தனர்.

    ஜெயக்குமார் தொடர்ந்து பேசுகையில், தொடக்கத்தில் இருந்தே அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்துள்ளார். ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் என்றால் அது ஓ.பன்னீர்செல்வம் தான். துரோகம் அவரது உடன் பிறந்தது. தூங்குவதைப் போல பன்னீர்செல்வம் நடித்துக் கொண்டிருக்கிறார். எந்த ஒரு உண்மையான அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்டமாட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வம் மாறிவிட்டார். அதிமுகவின் ஒற்றைத் தலைவராக ஆக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்பது தான் அதிமுக தொண்டர்களின் விருப்பம். வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள, அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிச்சயம் நல்ல முடிவு எடுக்கப்படும் என ஜெயக்குமார் கூறினார்.

    முன்னதாக, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்த போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட பேனர்களில், ஓபிஎஸ் புகைப்படத்தை மட்டும் கிழித்து எறிந்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், பேனரை கிழித்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக தலைமை அலுவலகத்தில் கிழிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பேனரை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.

    “என் வயித்துல எப்பொ நீ பொறக்கப் போறே?” வேண்டுதலுக்கு செவிசாய்க்கும் மாரியம்மன்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....