Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுக அலுவலகத்துக்கு சீல்- உயர்நீதிமன்றத்தில் வழக்கு

    அதிமுக அலுவலகத்துக்கு சீல்- உயர்நீதிமன்றத்தில் வழக்கு

    அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், சீலை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    அதிமுக பொதுக்குழு கூட்டம் 11-ம் தேதி காலை 9 மணியளவில் சென்னை வானகரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இப்பொதுக்குழு கூட்டத்தை ஓ. பன்னீர்செல்வம் புறக்கணித்தார். 

    மேலும், ஓ.பன்னீர்செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து, அவரை உள்ளே அழைத்து சென்றனர். 

    அந்நேரத்தில், அங்கிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மோதிக்கொண்டதில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்தனர். அதோடு, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிமுக ஆதரவாளர்களின் வாகனங்களும், பொதுமக்களின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டது. 

    தொடர்ந்து இரு தரப்பினருக்கும் மோதல் போக்கு நீடித்தது. இந்நிலையை கட்டுக்குள் கொண்டுவர அதிமுக தலைமை அலுவலகத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டனர். இதோடு, ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

    இதனையடுத்து, ராயப்பேட்டை காவல் நிலையத்தில், காவல் இணை ஆணையர், வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இந்த ஆலோசனைக்குப் பிறகு, கட்சி அலுவலகத்துக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் அங்கு நடந்த மோதல் குறித்து விசாரணை நடத்தினர். இதன்பிறகு, கட்சி அலுவலகத்துக்குள் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கிருந்து அவர் வெளியேறிய பிறகு அதிமுக அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

    மேலும், வருவாய் கோட்டாட்சியர் சார்பில் அலுவலகத்துக்கு யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாரயணன் முறையிட்டார். இந்த வழக்கானது நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. 

    இந்நிலையில், வருவாய்க் கோட்டாட்சியரின் உத்தரவை ரத்துசெய்து சீலை அகற்ற உத்தரவிடக்கோரி ஓபிஎஸ் தரப்பிலும் அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டது. 

    மனுதாக்கல் தொடர்பான நடைமுறைகள் முடிந்தால், வழக்கை தொடர்பான விசாரணைக்கு நாளை எடுத்துகொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....