நேற்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2022-ம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் நேற்று (செப்டம்பர் – 18) நடைபெற்றது. இந்த கூட்டமானது திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி இராம நாரயணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தயாரிப்பளர்கள் பலரும் கலந்து கொண்டனர் .
இதையும் படிங்க: செல்வராகவன் நடிப்பில் மோகன்.ஜி இயக்கத்தில் உருவான ‘பகாசூரன்’ …ரிலீஸ் மாதம் இதுதான்!
அப்போது சங்கத்தின் கணக்கு வழக்குகள் தொடர்பாகவும், தீர்மானங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதும், சங்க விதிகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக எழுந்த தீர்மானத்தின் போது மட்டும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும், தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை எனவும், தலைவர் பதவிக்குப் போட்டியிட ஏற்கெனவே தலைவர், செயலாளர் உள்ளிட்டப் பதவிகளில் இருந்திருக்க வேண்டுமெனவும் திருத்தம் மேற்கொண்டதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. சலசலப்பை அடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட சிலர் வெளிநடப்பு செய்தனர்.