சென்னையில் இருந்து, கொண்டு வந்து புதுச்சேரி எல்லைப்பகுதியில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் கஞ்சாவை ஒழிக்க, ஆபரேஷன் விடியல் என்ற பெயரில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணி ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கிருமாம்பாக்கம் போலீசார், எல்லை பகுதியான முள்ளோடையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது புதுச்சேரி எல்லைப்பகுதியான முள்ளோடை- குருவிநத்தம் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகேயுள்ள மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திறிந்த ஒருவனை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் அவரது வாகனத்தை சோதனையிட்டபோது, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ கஞ்சா, எடைமெஷின் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த விக்கி என்கின்ற விக்னேஷ் வயது 23 என்பதும், சென்னையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
நடைப்பயிற்சி மேற்கொண்ட மணக்குள விநாயகர் கோவில் யானை கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!