தர்ம யுத்தத்தை நாங்கள் துவக்கியுள்ளோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இடையே மோதல் போக்கு நிகழ்ந்து வருகிறது. மேலும், அதிமுக என்பது மறந்து நான் இ.பி.எஸ் அணி, நான் ஓ.பி.எஸ் அணி என்ற வேறுபாடு மேலோங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் கோவை செல்வராஜ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது;
எந்த ஒரு தொண்டனும் கட்சியின் தலைமை பதவிக்கு வரமுடியும் என்ற எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வகுத்துத்தந்த கழக சட்ட விதிகளை சிலர் சுயநலத்திற்காக திருத்தியுள்ளனர்.
அதிமுகவின் கழக விதிகளின்படி கழகம் செயல்பட வேண்டும் என்பதற்காகவே தற்போது தர்ம யுத்தத்தை நாங்கள் துவக்கியுள்ளோம். அவர்கள் செய்த விதிகளின் திருத்தத்தால் மிராசுதாரர்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் மட்டுமே கட்சியின் தலைமைப்பதவிக்கு வர முடியும்.
அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வகுத்துத்தந்த பாதையில் அனைவரும் செல்வோம். தவறான வழியில் செல்பவர்கள் ஊர் சென்று சேர முடியாது.
இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கன்னியாகுமரி டூ ஜோத்பூர்.. விமானத்தில் பறந்த ‘சினேரியஸ் கழுகு’ எதனால் தெரியுமா?