Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்; படிக்க சொன்னது குத்தமாடா?

    தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்; படிக்க சொன்னது குத்தமாடா?

    சத்தியமங்கலத்தில் தாயின் தலையில் கல்லை போட்டு 14 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சுங்கக்காரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வன். இவர் சிவில் காண்ட்ராக்டராக உள்ளார். இவருக்கு யுவராணி என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் தர்ஷினி என்ற மகளும் உள்ளனர். 

    யுவராணி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் சஞ்சய் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில், பள்ளிக்கூடத்தில் சரிவர படிக்காத சஞ்சய்யை அவரது தாய் யுவராணி கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் தனியார் பள்ளியில் உள்ள விடுதியில் சேர்த்தார். இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாகவே வீட்டில் இருந்த சஞ்சய்யை அவரது தாய், தந்தை இருவருமே கண்டித்து வந்ததால், வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க:தொடர்ந்து தோல்வி பாதையில் ஈஸ்ட் பெங்கால்…முன்னேற்றத்தில் கோவா!

    இதனைத்தொடர்ந்து, நள்ளிரவில் தாய், அவரது மகள் தர்ஷினி ஆகியோர் தூங்கி கொண்டிருந்த சமயத்தில், சஞ்சய் திடீரென தாய் யுவராணியின் மீது இருந்த ஆத்திரத்தில் வீடு கட்ட பயன்படுத்தப்படும் ஹாலோ பிளாக் கல்லை எடுத்து, தனது தாய் தலையின் மீது போட்டுள்ளார்.  இதில் பலத்த காயமடைந்த தாய் யுவராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

    அந்த சமயத்தில், மகள் தர்ஷினி சத்தம் போடவே சஞ்சய் வீட்டை விட்டு ஓடி தலைமறைவானார். இதுகுறித்து, அவர்களது உறவினர்கள் மற்றும்  கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், புஞ்சை  புளியம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பிறகு, இறந்த நிலையில் கிடந்த யுவராணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து, சிறுவன் சஞ்சய்யை பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    14 வயது சிறுவன் தனது தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....