ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 6-வது ஆட்டத்தில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 9-ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி 2013-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதாகவே ஐஎஸ்எல் இருந்து வருகிறது.
மேலும், இந்த வருடத்திற்கான ஐஎஸ்எல் இன்று தொடங்க உள்ளது. கொரோனா சூழல் காரணமாக கடந்த 2 சீசன்களும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், இந்த சீசன் வழக்கமான ‘ஹோம்-அவே’ முறையில் நடைபெறுகிறது.
எனவே, அனைத்து அணிகளும் தனது சொந்த மண்ணில் ஒரு ஆட்டமும், எதிரணி மண்ணில் ஒரு ஆட்டமும் விளையாட உள்ளன. மேலும், மைதானத்துக்கு நேரில் வந்து ஆட்டத்தைக் காண ரசிகர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:‘கொடி கொடி கொடி பறக்க…பொரி பொரி பொரி பறக்க…’ வசூல் வேட்டை நடத்தும் பொன்னியின் செல்வன்!
இந்நிலையில், ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் எஃப்சி கோவா மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 7-வது நிமிடத்திலேயே கோவா அணி கோல் அடித்து தன் கணக்கை தொடங்கியது.
இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 2-வது பாதியில் பெங்கால் அணிக்காக கிளெய்டன் 64-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தார். ஆனால், கோவா அணி வீரர் எட்வார்டோ பெடியா பெலேஸ் கடைசியாக 90-ஆவது நிமிடத்தில் ஃப்ரீ கிக் வாய்ப்பில் அருமையாக கோலடித்து, அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதன்மூலம், கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது. முன்னதாக கோவா தனது முதல் ஆட்டத்தில் வெற்றியும், பெங்கால் தனது முதல் ஆட்டத்தில் தோல்வியும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.