ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஆலய வழிபாட்டோடு நடைபெற்று வருவதாகவும், இன்று தொடக்க நாளே குபேர மூலையில் தொடங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
குபேர மூலை என்றாலே செல்வதை பெருக்குவதும், வெற்றியை பெருக்குவதும் என்றும், திண்டுக்கல் இடைத்தேர்தலில் போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நாளை மறுநாள் வேட்பாளர் அறிமுக கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெற இருப்பதாகவும், அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் வரலாற்றை படைக்கப்போவதாக தெரிவித்த செங்கோட்டையன், இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள்; ஒற்றுமை உணர்வோடு பணிகளை ஆற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
‘அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை’ – மைக்கேல் பட இயக்குநர்!