2022-ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அனி எர்னாக்ஸ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. இந்த பரிசானது மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த வருடமும் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, இந்த ஆண்டுக்கான இயற்பியல், வேதியியல், மருத்துவம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது 2022-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அனி எர்னாக்ஸ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எல் அகுபேஷன் (L’occupation) என்ற புத்தகத்தை எழுதியதற்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:‘அடடா’,.. என வியக்க வைக்கும் நடிகை த்ரிஷாவின் அழகிய பிரத்யேக புகைப்படங்கள்!